கிறிஸ்து முஹம்மதுவைவிட மேலானவர்.

என்னுடைய பெயர் அலியு, நான் நைஜீரியாவில் வாழ்கிறேன். நான் முஸ்லிமாக இருந்தபோது என்னுடைய நாட்டிலிருந்து கிறிஸ்தவத்தை முற்றிலுமாக அழித்துவிட முயற்சித்தேன். அதற்காக என்னிடத்தில் போதிய அளவு பணமும், ஆயுதமேந்திய போராளிகளும், அரசாங்கத் தொடர்புகளும், உள்ளூர் சுல்தான்களுடைய ஆதரவும் இருந்தது.



வெறுக்கப்பட்ட இயேசுவின் சமயத்திற்கு எதிராக நாங்கள் ஒரு நீண்ட போராட்டத்தைப் போராடினோம். ஆயினும் எங்களுடைய திட்டம் ஒருபோதும் வெற்றியடையவில்லை. நைஜீரியாவிலுள்ள கிறிஸ்தவர்களுக்கு கடுமையான எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்த முடியாதபடி ஒரு மறைவான கரம் அவர்களைப் பாதுகாப்பதை என்னால் உணர முடிந்தது.

எனக்கு குரான் மனப்பாடமாகத் தெரியும். அதில் கிறிஸ்து முஹம்மதுவைவிட மேலானவராகச் சித்தரிக்கப்பட்டுள்ளார் என்பதனை நான் மீண்டும் மீண்டும் கவனித்திருக்கிறேன். மற்ற முஸ்லிம்கள் என்னுடைய நிலைப்பாட்டை எதிர்ப்பார்கள் என்று நான் அஞ்சியதால், இருளானதும் மறைவானதுமான சக்திகளிடம் பாதுகாப்புத் தேடினேன்.

பிசாசுகளின் வல்லமைகளை நான் பயன்படுத்தியதால் நான் நிச்சயமாக நரகத்தின் பாதையில்தான் செல்கிறேன் என்பதை நன்கு அறிந்திருந்தேன். இறுதியில் நான் நிற்கதியான நிலைக்குள்ளானேன். அப்போது நான் என்னுடைய பாவங்களை அறிக்கை செய்து இறைவனுடைய இரட்சிப்பைப் பெற்றுக்கொள்ளும்படி ஒரு போதகரைத் தேடினேன்.

அவர்களில் பெரும்பான்மையானவர்கள், நான் அவர்களுடைய எதிரி என்பதை அறிந்திருந்த காரணத்தினால், என்னைக் கண்டு அஞ்சினார்கள்.

இறுதியில் நான் ஒரு போதகரைக் கண்டு என்னுடைய பாவங்களை அறிக்கை செய்தபோது என்னுடைய தோள்களிலிருந்து ஒரு பெரிய பாவமலை உருண்டு ஓடியதைப்போல இருந்தது. “இருளின் வல்லமையின் மீது ஒளியின் வெற்றி” என்பதே என்னுடைய வாழ்வின் நோக்கமாக மாறியது.

பல முஸ்லிம்கள் என்னைக் கொலைசெய்வதற்கு முயற்சித்தார்கள். ஆனால் நான் இன்றும் உயிருடன் இருக்கிறேன். அனைத்து இடங்களிலும் முஹம்மதுவைவிட பலமானவரைப் பின்பற்றும்படி நான் அவர்களுக்கு அழைப்பு விடுத்து வருகிறேன்.