ஈஸா முஸ்லிம்.

தஞ்சம் கேட்கும் இஸ்லாமியரை திறந்த மனதோடு உபசரிக்கும் வீடுகள்

ஜாக் வெளியே ஓடிப் போய் விட்டான் - ஒரு சகோதரன்அவனுக்குவிஷம் கொடுத்து விடுவார்கள் என்பதைத் தெரியப்படுத்தியிருந்தான்ஜாக்கின் தந்தை ஒரு மௌலவியாவார் தனது 17 வயது மகன்ஈஸா அல் மஸீஹை பின்பற்றுபவனாக மாறி விட்டான் என்பதைக்கண்டுபிடித்து விட்டார்சில வருடங்கள் கழித்து இறையியல் கல்விபயில்வதற்காக கனடாவிற்கு வந்தான் அந்த ஈஸா முஸ்லிம்.கடுமையான தனிமையும்ஒரு அந்நிய தேசத்தில் குடும்பமேஇல்லாத புதிய நபராக இருப்பதன் வலியும் அவனை வாட்டியது.

யுத்தம், ஒழுக்கமின்மை முரண்பாடுகள், மத ரீதியான உபத்திரவங்கள், இயற்கை அனர்த்தங்கள் நிமித்தம் அவற்றிலிருந்து தங்களை காத்துகொள்வதற்காக ஜனங்கள் வட அமெரிக்கா நோக்கி வருகின்றார்கள். இப்படி ஆயத்தமில்லாமல்வருகின்ற புதியவர்கள் வெளிநாட்டில்குறிப்பாகஅவர்களைஉண்மையிலேயே வரவேற்காத நாட்டில் எவ்வாறு இருக்கிறார்கள்?

 2008ம் ஆண்டில் புதியவர்கள் மையம்(ஜாக்கும் அதில் ஒருவன்)கனடாவில் திறக்கப்பட்டதுஇதன் நோக்கம் முஸ்லீம்களைவரவேற்று அவர்களுக்குப் புதிய நாட்டில் நடைமுறை உதவிகளைசெய்வதாகும்வீடு-கட்டும் உதவிஆங்கில மொழி பயிற்சி,பிள்ளைகள் பராமரிப்பு உதவிவீட்டுப்பாட உதவி போன்றவற்றைபெற்றுக் கொண்டதன் விளைவாக நட்புறவுகள்ஏற்படுத்தப்பட்டுள்ளனஇன்றைக்கு புதிய தாய்மார்களின்குழந்தைகளைக் குளிப்பாட்டுவதுஇளைஞர்களுக்குக்கால்பந்தாட்டம்முழு குடும்பத்திற்கும் சமுதாய கொண்டாட்டங்கள்ஆகிய சில காரியங்களையும் புதிய வரவேற்பதற்காக இந்த மையம்செய்து கொண்டிருக்கிறது.


முஸ்லீம்கள் புதிய கிறிஸ்தவ நண்பர்களோடு நட்பை ஏற்படுத்திக்கொள்ளும் போதுஇதயத்தோடு இதய தொடர்புகள் ஏற்படுகின்றன.சிலர் ஏற்கனவே ஈஸா அல் மஸிஹை பின்பற்றுபவர்களாகமாறிவிட்டிருக்கிறார்கள்மற்றவர்கள் சமாதான பிரபுவிடம் செல்லும்வழியில் உள்ளனர்சுவிசேஷத்தின் விதைசர்வதேச குழுஅவர்களுக்கு ஊழியம் செய்யும்போது விதைக்கப்படுகிறது.

துஆ செய்வோம்.
•          தனது சொந்த மதத்தை விட்டு வெளியேறியுள்ள இஸ்லாமியர் மற்ற மக்களோடு கலாச்சாரம் மற்றும் மொழியிலே இணைவதை கடினமாக காண்கிறார்கள். முதிர்ச்சியான கிறிஸ்தவர்கள் ஈஸா முஸ்லீம்களை நண்பர்களாகவும் தங்கள் குடும்பத்தினராகவும் நோக்கவேண்டும் என்று துஆ செய்வோம்.

•          விசுவாசிகள் சமாதான மனிதர்களை (லூக்கா 10) சந்திக்கவும்,முஸ்லீம்களை சமாதானப் பிரபுவிடம் அறிமுகப்படுததும்கருவிகளாக மாறவும் இறைவன் அவர்களை வழிநடத்தவேண்டும் என்று துஆ செய்வோம்.

•          வடஅமெரிக்காவிலுள்ள முஸ்லீம்கள் மேற்கத்திய நாட்டவர்ஒருவர் ‘ஹாய்’ என்று வாழ்த்தும் போது அதிர்ச்சிஅடைகின்றனர்ஆனால் பல நேரங்களில் இந்த ‘ஹாய்தான்வாழ்நாள் முழுவதும் தொடர்கின்ற உறவுகளை ஏற்படுத்தஉதவுகின்றனஎனவே விசுவாசிகள் இவ்வித வாழ்த்துகளைத்தெரிவிக்க முன்வர துஆ செய்யுங்கள்.


•          மேற்கத்திய திருச்சபைகள் தங்கள் நாட்டிற்கு வரும்முஸ்லீம்களை தொந்திரவாகஆபத்தாகப் பார்க்காமல்தேவன்தரும் வாய்ப்பாக பார்க்கத்தக்கதான பார்வையை தேவன்அவைகளுக்குத் தர ஜெபியுங்கள்

ஈசா(அலை) அவர்களின் மரணத்தை உறுதி செய்யும் திருக்குர்ஆன்

ஹஸ்ரத் ஈசா (அலை) அவர்களை நேரடியாக சுட்டிக்காட்டி மரணித்துவிட்டார் என்று காட்டும் திருக்குர்ஆன் வசனத்தைப் பார்ப்போம்.
” மரியமின் மகன் ஈஸாவே, அல்லாஹ்வைத் தவிர என்னையும் எனது தாயாரையும் இரு கடவுள்களாக ஆக்கிக் கொள்ளுங்கள் என்று மக்களிடம் நீர் கூறினீரா என்று அல்லாஹ் கேட்பான். அவர் கூறுவார். நீ தூய்மையானவன், எனக்குத் தகாததை நான். கூறியதில்லை. அவ்வாறு கூறியிருந்தால் நிச்சயமாக நீ அறிந்திருப்பாய். என் உள்ளத்தில் உள்ளதை நீ அறிவாய். உன் உள்ளத்தில் உள்ளதை நான் அறியமாட்டேன். நிச்சயமாக மறைவானவற்றை நீயே நன்கு அறிந்தவனாவாய் என்று கூறுவார். (மேலும்) நீ எனக்கு கட்டளை இட்டபடி என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனுமாகிய அல்லாஹ்வையே வணங்குங்கள் என்பதையே நான் அவர்களிடம் கூறினேன். நான் அவர்களோடு இருந்த காலம் அவரை அவர்களுக்கு நான் சாட்சியாக இருந்தேன். ஆனால், நீ என்னை மரணிக்க செய்த பின் நீயே அவர்களின் கண்காணிப்பாளனாக இருந்தாய். மேலும் நீயே எல்லாவற்றிக்கும் சாட்சியாளனாக இருந்தாய்.” (திருக்குர்ஆன் 5:117,118)
இந்த வசனத்தைப் படித்து சிந்தித்துப் பாருங்கள். நியாயத் தீர்ப்பு நாளில் அல்லாஹ் ஈசா(அலை) அவர்களிடம் அவரையும், அவரது தாயாரையும் இரு கடவுள்களாக ஆக்கிக் கொள்ளும்படி மனிதர்களுக்கு கூறினீரா எனக் கேட்பான் என்றும், அவர் பதிலளிக்கையில் அவ்வாறு நான் கூறவில்லை என்றும் அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டுமென்றே கூறினேன் என்றும் அவர்கள் மத்தியில் வழ்ந்திருந்தவரையில் தம்மையும், தனது தாயாரையும் கடவுள்களாக தமது மக்கள் வணங்கவில்லை என்றும் அதற்க்கு அவரே சாட்சியாளன் என்றும், அவரை மரணிக்கச் செய்த பின் அவர்களின் நம்பிக்கைக்கு என்ன மாற்றம் ஏற்பட்டதென அவர் அறியமாட்டாரென்றும், அவர்களை கவனிப்பவனும் அவர்களின் செயல்களுக்கு சாட்சியாக இருப்பவனும் இறைவனே என்று அவர் பதில் சொல்லுவார் என்றும் இந்த இறைவசனத்தில் கூறப்பட்டிருக்கிறது. இதிலிருந்து நாம், தெரிந்து கொள்வது யாதெனின், ஈசா நபி மனிதர்கள் மத்தியில் இருந்தவரை, அவரை மக்கள் கடவுளாகவோ, கடவுளின் குமாரனாகவோ வணங்கவில்லை என்றும், மக்கள் ஈசா நபியை கடவுளாக வணங்கியது, அவர்களின் மரணத்திற்கு பிறகே என்றும் மிகத் தெளிவாக தெரிகிறது. ஆகவே, ஈசா நபியின் மரணம் முன்பும், மனிதர்கள் அவரை கடவுளாக வணங்க ஆரம்பித்தது பின்பும் என மேற்படி இறைவசனம் நமக்குத் தெளிவுபடுத்துகிறது.
இப்னுமரியம், அதாவது மரியமின் மகன் ஈசா வருவார் என்ற சில நபி மொழியின்படி, சென்ற காலத்தில் யூதர்களுக்காக அனுப்பப்பட்ட ஈசா நபி மரணிக்காமல் வானத்தில் வாழ்ந்து வருகிறார் என்ற தவறான நம்பிக்கையை மக்கள் மத்தியில் ஆலிம்கள் நீண்ட காலமாக போதித்து வந்ததன் காரணமாக குரானுக்கு எதிரான இந்த நம்பிக்கையை உம்மத்தே முஹம்மதியாவாகிய முஸ்லிம்களின் உள்ளத்தில் நன்றாகப் பதிந்துவிட்டது. அந்த நம்பிக்கை பரிசுத்த குரானுக்கு எதிரானது என நிரூபிக்கும் பொறுப்பில் அஹ்மதியா முஸ்லிம் ஜமாஅத் இருக்கிறது எனக் கூறிக் கொள்கிறேன். திருக்குரானுக்கு விளக்கம் கூறுவதற்கு முதல் தகுதி ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு உண்டு என்பதை ஞாபகம் வைத்துக்கொள்ளவேண்டும். மேற்படி இறை வசனத்திற்கு விளக்கம் கூறுவதைப் போன்று ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், தங்களுக்கு மறுமையில் நடக்கும் ஒரு சம்பவத்தை கூறுகிறார்கள். ஹஸ்ரத் இமாம் புகாரி (ரஹ்) அவர்கள், மேற்க்படி இறை வசனத்திற்கு விளக்கமாக இந்த ஹதீஸை தங்கள் கிரந்தத்தில் எழுதியிருக்கிறார்கள்.
ஹஸ்ரத் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:- நியாயத் தீர்ப்பு நாளில் என் உம்மத்தாரிலிருந்து சிலர் நரகத்தின்பால் இழுத்துச் செல்லப்படுவார்கள். அப்போது நான் என் இறைவனே இவர்கள் என் அருமைத் தோழர்கள் எனக் கூறுவேன். இதரிக்கு என்னிடம் உமக்குப் பிறகு இவர்கள் புதுமையாக என்ன செய்தார்கள் என்று நீர் அறிய மாட்டீர். என்று கூறப்படும். அப்பொழுது நான் அந்த நல்லடியார் (ஈசா நபி) கூறியது போல் நான் அவர்களோடு இருந்த காலம் வரை அவர்களுக்கு சாட்சியாக இருந்தேன். ஆனால் நீ என்னை மரணிக்கச் செய்த பிறகு நீயே அவர்களின் கண்காணிப்பாளனாக இருந்தாய் என்று கூறுவேன். அப்பொழுது நீர் இவர்களை விட்டு பிரிந்ததிலிருந்து இவர்கள் மார்க்கத்தை விட்டு திரும்பி போனார்கள் என்று கூறப்படும்.” ( புகாரி கிதாபுத் தப்ஸீர்)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இத்திருமொழியில் அந்த நல்லடியார் கூறியது போன்று என்று ஈசா நபியை சுட்டிக்காட்டி, அவர்கள் குர் ஆனின் எந்த சொற்களை உபயோகித்திருக்கிறார்களோ அதே சொல்லான ‘வகுன்து அலைஹிம் ஷஹீதன் மாதும் துஃபீஹிம் பலம்ம தவஃப்பைத்தனீகுன்த அன்தர்ரகீப அலைஹிம், அதாவது அவர்களோடு இருந்த காலம் வரை அவர்களுக்கு சாட்சியாக இருந்தேன் ஆனால் நீ என்னை மரணிக்க செய்தபின் நீயே அவர்களின் கண்காணிப்பாளனாக இருந்தாய் என்று கூறியிருக்கிறார்கள். திருக்குரானில் ஈசா நபி (அலை) அவர்கள் கூறிய இந்த சொற்களில் ஒரு எழுத்துக் கூட மாற்றம் இல்லாத சொல்லாக ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் மறுமையில் கூறுகிறார்கள். ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பலம்ம தவஃபைத்தனீ என்று உபயோகித்த சொல்லிற்கு நீ என்னை மரணிக்க செய்தபின் என்று சரியான பொருள் கொடுத்திருக்கும் போது, ஈசா (அலை) அவர்கள் கூறும் அதே சொல்லான பலம்ம தவஃபைத்தனீ என்ற சொல்லுக்கு ‘நீ என்னை ( உடலோடு வானத்திற்கு) கைப்பற்றிய பின்.’ என்று விளக்கம் கொடுப்பது என்ன நியாயத்தில் இருக்கிறது. நீங்களே நன்கு சிந்தனை செய்துபாருங்கள்.
நபி (ஸல்) அவர்களுக்காக கொடுக்கப்பட்ட சரியான பொருளாகிய ‘நீ என்னை மரணிக்க செய்தபின்’ என்ற பொருளையே ஈசா(அலை) அவர்களுக்கும் கொடுத்து இந்த பூமியில் ஈசா நபி இறந்துவிட்டார்கள் என்றும், அவர்கள் இறந்த பின் அவர்களைப் பின்பற்றிய மக்கள் அவர்களை இறைவனாகவும், இறைவனின் குமாரனாகவும் வணங்க ஆரம்பித்துவிட்டார்கள் என்றும் உறுதியான நம்பிக்கைக் கொண்டு திருக்குரானுக்கு எதிரான நம்பிக்கையினால் ஏற்படும் குற்றத்திலிருந்து விலகிக் கொள்ளவேண்டும் என்று முஸ்லிம் சகோதரர்களுக்கு நினைவுறுத்துகிறேன்.
இஸ்லாமின் ஆரம்ப காலத்தில் லட்சக்கணக்கான கிருஸ்தவர்கள் முஸ்லிம்கலாகிவிட்டார்கள். அவர்களிடம் உள்ள பழைய நம்பிக்கையாகிய ஈசா நபி வானத்தில் உயிரோடு பூத உடலுடன் இருக்கிறார் என்ற கொள்கை, இஸ்லாம் மார்க்கத்தில் படிப்படியாக புகுந்து ஆக்கிரமித்துக் கொண்டது. அதற்க்கு காரணம் முல்லாக்களான ஆலிம்களே. இறுதி காலத்தில் மரியமின் மகன் ஈசா வருவார் என்று சில ஹதீதுகளை காட்டி திருக்குர்ஆன் வசனங்களுக்கு மாற்றமான பொருள் கொடுத்து முஸ்லிம்கள் அனைவரையும் திருக்குரானுக்கு எதிரான நம்பிக்கைக்கு கொண்டு சென்றுவிட்டார்கள். அதைத்தான் மறுமையில் ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) என் இறைவனே எனது சமுதாயத்தினர் இந்த குரானை முதுகுக்கு பின்னால் எறிந்து விட்டனர் என்று கூறுவார், என்ற வசனம் தெளிவாக தெரிவிக்கிறது.
மேலும் விபரங்களுக்கு இங்கே க்ளிக்

என் தாயாரின் கபுரடிக்குச் செல்லும் வழியில்...

என் தாயாரின் கபுரடிக்குச் செல்லும் வழியில் கார் ஓட்டுனருடன்… - umar.


என் தாயார் மரித்து சில நாட்கள் ஆனது. அவரது அடக்கஸ்தளத்தை காண நான் முதல்  முறையாகச் சென்றேன். என்னோடு ராதி என்ற என் நண்பரும் வந்தார். நாங்கள் ஒரு காரை வாடகைக்கு வைத்துக்கொண்டுச் சென்றோம். அந்த காரின் ஓட்டுனர், எங்களோடு அரசியல் பற்றி பேசிக்கொண்டே வந்தார்.
 இந்த கார் ஓட்டுனர் படித்தவர் என்பதை நான் அறிந்துக்கொண்டேன். ஒரு பள்ளியில் தான் ஒரு சமூக சேவகனாக வேலை பார்ப்பதாகவும், தன்னுடைய வருமானம் போதுமானதாக இல்லாத காரணத்தால் பகுதி நேரமாக இப்படி கார் ஓட்டுனராக வேலை செய்வதாகவும் அவர் கூறினார்.

மரணம் ஒரு முடிவல்ல. அதற்கூடாக நித்தியத்தை சுதந்தரிப்பேன்.

ஆப்கானிஸ்தான் நாட்டில் கெய்ல் வில்லியம்ஸ் அவர்களின் நண்பருடன் சேர்த்து பலர் தாலிபான் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டனர். நண்பரின் உடல் அடக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கெய்ல் வில்லியம்ஸ் அவர்கள் சொன்ன காரியம் "இந்த கல்லறைகளை நாம் இப்போ பார்க்கிறோம். எனக்கு தெரியும் நான் மரித்தால், இங்கே (ஆப்கானிஸ்தானில்) நித்திரை அடைவேன் என்று" என்று தன்னுடன் ஊழியம் செய்யும் நண்பர்களிடம் சொன்னார். கிறிஸ்துவுக்காக மரிப்பதில் எவ்வளவு வைராக்கியம் பாருங்கள்.

கிறிஸ்து முஹம்மதுவைவிட மேலானவர்.

என்னுடைய பெயர் அலியு, நான் நைஜீரியாவில் வாழ்கிறேன். நான் முஸ்லிமாக இருந்தபோது என்னுடைய நாட்டிலிருந்து கிறிஸ்தவத்தை முற்றிலுமாக அழித்துவிட முயற்சித்தேன். அதற்காக என்னிடத்தில் போதிய அளவு பணமும், ஆயுதமேந்திய போராளிகளும், அரசாங்கத் தொடர்புகளும், உள்ளூர் சுல்தான்களுடைய ஆதரவும் இருந்தது.

குரான் முற்றிலும் எரிந்து சாம்பலாகிவிட்டது, என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியது

(அசாலி, பாக்கிஸ்தான்)

நான் வாலிபனாயிருக்கும்போது குரான் தவறற்றது என்று இஸ்லாமியப் போதகர்கள் எனக்குக் கற்பித்தார்கள். ஏனெனில் அது அல்லாஹ்வினால் முத்திரையிடப்பட்டது (மாசோஅம் – ma'soum) என்று அவர்கள் சொன்னார்கள்.

என்னுடைய பெயர் அசாலி, நான் பாக்கிஸ்தானைச் சேர்ந்தவன்.  என்னுடைய வகுப்பில் இருந்த இரண்டு கிறிஸ்தவ மாணவர்களைத் தவிர அனைவருமே இஸ்லாமியர்கள்தான். அந்த இரண்டு கிறிஸ்தவ மாணவர்களையும் இஸ்லாமிற்கு மாற்ற நான் விரும்பினேன்.

இயேசுவை பற்றிய உண்மையை நான் அறிந்துக்கொண்டேன்

(ஆயிஷா - )

நான் ஒரு இஸ்லாமியராய், இஸ்லாமிய‌ நாட்டிலே வளர்க்கப்பட்டதால் என்னுடைய மதம் எனக்கு மிகவும் முக்கியமானதாக இருந்தது.  எனது பெயர் ஆயிஷா.

பாவங்களைக் காட்டும் கண்ணாடி வேத புத்தகமே

(ஹசன் - கிராஜிஸ்) 

நான் ஒரு இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன். ஆனால் எங்களது இஸ்லாம் மோல்டோக்களுடைய மாந்த்ரீகங்களை தன்னுள் கொண்டது. என்னுடைய பெயர் ஹசன். நான் மத்திய ஆசியாவிலிருக்கும் கிர்ஜிஸ் இனத்தைச் சேர்ந்தவன். 

சயீத் அயினுல் ஹதீத்

படத்தயாரிப்பாளர், தற்போது வயது 38. 

நான் புனேவில் ஒரு செல்வ செழிப்பான முஸ்லீம் குடும்பத்தில் பிறந்தேன். எனது குடும்பம் பரம்பரையாக பக்தி மார்க்கத்தில் ஊறியிருந்த குடும்பம். எனக்கு நான்கு வயதாக இருந்த போது என் பெற்றோர் பிரிந்து விட்டனர். நானும் என் அம்மாவும் எங்கள் அத்தையுடன் ஹைதராபாத்தில் குடி புகுந்தோம். 

என்னுடைய சிறுவயதிலிருந்தே நான இஸ்லாமிய பாரம்பரியங்கள் கற்றுக்கொடுக்கப்பட்டேன். குரானை அரபி மொழியில் படிக்க கற்றுக் கொண்டேன்.

ஏழு சிறைக்கைதிகள்

ஏழு ஆண்டுகளாக தீவிரம் கொண்ட முஸ்லிம் தலைவர்கள் ஹமோனியாவிலுள்ள 'நாஸ்திகர்கள்எல்லோரையும் இஸ்லாத்தைப் பின்பற்றும்படி வாதித்து வழிப்படுத்த முயன்றனர். மதம்மாறாத கிறிஸ்தவர்கள் சிறையில் கொடுமை யான இருளில் சிக்கிக்கொண்டனர்.

இஸ்லாமியரின் இரட்டை வேடம்....


TNTJயின் காப்பி பேஸ்ட் ஊழியங்கள் (தஃவா) பணி குறித்து கிறிஸ்தவர்கள் கவனமாக இருக்க வேண்டும்...

ஸஹீஉல் புகாரியில் 4485ம் ஹதீஸ் இப்படியுள்ளது. ” அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.  வேதக்காரர்(களான யூதர்)கள், தவ்ராத்தை ஹீப்ரு மொழியில் ஓதி, அதை இஸ்லாமியர்களக்கு அரபு மொழியில் விளக்கம் கொடுத்து வந்தார்கள். …” இது ஒரு தொடர் ஹதீஸின் ஆரம்ப பகுதியாகும்.

நீ இரண்டு எஜமான்களுக்கு ஊழியம் செய்ய முடியாது. - தௌபிஃக், (நைஜீரியா)

என்னுடைய பெயர் தௌபிஃக், நான் நைஜீரியாவில் வாழ்கிறேன். என்னுடைய தாயும் தந்தையும் முஸ்லிம்கள்.

நான் சிறுவனாக இருக்கும்படி என்னைப் பராமரித்து வளர்க்கும் பொறுப்பை என் பெற்றோர் ஒரு இஸ்லாமிய ஷேக்கினிடத்தில் ஒப்படைத்திருந்தனர். அவரிடமிருந்து குரானுடைய பெரும்பகுதியை மனப்பாடமாகக் கற்றுக்கொண்டேன். அதேவேளையில் பிசாசுகளுடன் தொடர்புகொள்ளவும் அவர் என்னைப் பயன்படுத்தினார். அவர் ஒரு மந்திரவாதியாக இருந்த காரணத்தினால் அவர் இப்படிச் செய்தார். 

உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள். - பாராக்கத்துல்லா (எகிப்து)

என்னுடைய பெயர் பாராக்கத்துல்லா, நான் எகிப்தைச் சேர்ந்தவன். நான் ஒரு அதிகாரியாகவும் முஸ்லிம் தலைவனாகவும் இருந்தேன். 

ஒரு நாளில் ஒரு துண்டுக் காகிதம் என்னுடைய கவனத்தைக் கவர்ந்தது. அதில் “ஆனால், நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்” என்று எழுதியிருந்தது. அதை நான் எடுத்து முழுவதும் வாசித்தேன். அதில் கிறிஸ்து பேசியிருந்தார். அவர் சொன்னது: உனக்கடுத்தவனைச் சிநேகித்து, உன் சத்துருவைப் பகைப்பாயாக என்று சொல்லப்பட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்;.. (மத்தேயு 5:43-44). 

இரத்தம் சிந்தப்படாமல் பாவப்பரிகாரமோ பாவமன்னிப்போ கிடைக்காது. (இம்ரான்,- யோர்தான்)

என்னுடைய பெயர் இம்ரான், நான் யோர்தான் நாட்டைச் சேர்ந்தவன். நான் ஒரு பக்தியுள்ள முஸ்லிமாக இருந்து பல இஸ்லாமிய பள்ளிகளுக்குச் சென்றிருக்கிறேன். இறுதியாக நான் கெய்ரோவிலுள்ள அல் அஸôர் பல்கலைக்கழகத்தில் இஸ்லாத்தைப் பயின்றேன். 

விசுவாசத்தின் வழி மன்னிப்பு! - ஆசிஸ் (பாக்கிஸ்தான்)

என்னுடைய பெயர் ஆசிஸ். நான் பாகிஸ்தானின் ஒரு முன்னாள் முஸ்லிமாக வாழ்கிறேன். 

புயலில் என்னைக் காத்த ஈசா அல் மஸீஹ் (இயேசு கிறிஸ்து) - வங்காளதேசம்.

என்னுடைய பெயர் உதுமான், என்னுடைய மனைவியின் பெயர் மொதீனா. நாங்கள் வங்கதேசத்தின் எல்லைகளுக்கு அருகான இந்தியாவின் வடக்கு மாநிலத்தில் வாழ்கிறோம். 

நாங்கள் இருவரும் முஸ்லிம்களாக இருந்தோம். நான் ஒரு மீனவன். அதோடு நானும் என்னுடைய மனைவியும் சேர்ந்து சிறிதளவு விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறோம். 

சிலுவையைச் சுமப்பேன். (பாக்கிஸ்தான் தோழிகள்)

'சிலுவையை சுமப்பேன் என்று நீங்கள் உறுதிகொண்டால் அது வாழ்நாள் முழுவதும் முற்களாகவும், மலைகளாகவும், பிரச்சனைகளாகவுமே இருக்கும்” என இளம் வாலிப பெண் சலீமா உறுதியுடன் கூறினாள். 

இஸ்லாமிய நாடான பாகிஸ்தானில் கிறிஸ்தவளாக வாழும் சலீமா தனது ஈமானை, பாடசாலை தோழியான ரகீலாவுடன் பகிர்ந்து கொண்டாள், பின் நாட்களில் அவளும் ஈசாவை தனது சொந்த இரட்சகராகவும் ஆண்டவராகவும் ஏற்றுக்கொண்டாள்.